6
யாரும் ஒன்றும் பேசவில்லை. வெறும் பேச்சால் பிரதி நிதித்துவப் படுத்த முடியாத உயர்ந்த நினைவுகள் எல்லார் உள்ளத்திலும் இருந்தன.
“நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்” என்று ஆங்கிலத்தில்சிறிய குரலில் கூறினான் தியாகராஜன். சூழ்நிலைக்கு அந்த வார்த்தைகள் வெகு நன்றாக இருந்தன.
பறவைகளின் கூச்சலும், விலங்கினங்களின் ஆரவாரமும் இரவின் அமைதியில் சிறிது நேரத்துக்குள் புதைந்து விட்டன.
மாய விக்னேசுவரர் கோவில் மத்தியான வெய்யிலில், பாரத தேசத்தின் புராதனப் பண்பாடுகளும், தலைமுறை தலைமுறையாகக் காத்து வளர்க்கப்பட்ட புனிதமான தர்மங்களும் தன் மகிமையோடு சிரஞ்சீவியாக நின்று நிலைத்திருப்பது போல் எத்தனையோ வருஷங்களுக்கு முன் கட்டப்பட்டிருந்தும், குலைவுறாமல் கம்பீரமாகப் பிரகாசித்தது. அதைச் சுற்றிலும் ஓடிய அருவி, கற்றுணர்ந்து அடங்கிய ஞானிகள் போல் ஆரவாரமின்றி மெல்ல ஓடிக் கொண்டிருந்தது. ஜீவானந்தம் உயர்ந்த மரம் ஒன்றின் கீழே படுத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
மூங்கில் மரங்களின் இலைகளிலிருந்து வரும் சசலசலவென்ற ரகசியங்களும், வெய்யிலில் சோம்பலோடு காய்ந்தவாறு மந்தமாக வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்து ஒன்றும் சூழ்நிலை அழகாக்கின. திடீரென்று வளையல்களின் ஓசை கேட்டது. எழுந்திராமல் கழுத்தை மட்டும் வளைத்துப் பார்த்தான். நிஷாதான் வந்து கொண்டிருந்தாள். அவனுக்கு உடம்பு எரிந்தது.
“ஏய் நிஷா!” என்று அவளை உரக்கக் கூப்பிட்டான்.
அவனைப் பார்த்துக் கொண்டே கலகலவென்று சிரித்தவாறே அவனருகில் வேகமாக ஓடிவந்தாள் நிஷா.
“உட்கார்” என்று உணர்ச்சியின்றிச் சொன்னான் ஜீவானந்தம்.
“முடியாது” என்று வேடிக்கையாக மறுத்தாள் நிஷா.
“வேடிக்கையெல்லாம் வேண்டாம்; உட்கார்” அவன் குரலில் கடுமை ஏறிற்று. நிஷா விழித்தவாறு உட்கார்ந்தாள்.
“உனக்கு வெட்கமிருக்கிறதா? அந்தத் தியாகராஜன் கல்யாணமானவன். அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். அவனோடு போய்ச் சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கலாமா?” என்றான் ஜீவா.
“ஏன், என்ன தப்பு?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் நிஷா.
“அவன் தன் மனைவியை அப்புறம் அடியோடு மறந்து விடுவான். நிஷா, உன்னால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாழாவதென்றால், இதோ ஓடும் இந்த அருவியில் உன் கழுத்தை நெரித்துத் தூக்கிப் போடுவேன்” என்று அநாவசியமாக இரைந்தான் ஜீவா.
நிஷா பயந்து போய் அவன் முகத்தைக் குழந்தைபோல் பார்த்தாள்.
“உன்னைக் குற்றம் சொல்லிப் பயன் இல்லை. அவன் அந்த வெறியனுக்குத் தன் கையிலிருக்கும் பொருளின் மதிப்புத் தெரியாது. அவள் எவ்வளவு நல்ல மனைவியென்று தெரியாமல் முரட்டு ஜன்மம்போல் நடந்து கொள்கிறான். அந்தப் பெண், கொட்டிலில், கட்டிவிட்ட பசுவைப்போல் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறாள்.”
“சொன்னதெல்லாம் சரிதான் மிஸ்டர் ஜீவன்! ஆனால் பிற்பகுதிதான் நேர்மாறு” என்று திடீரென்று இடைமறித்தவாறு ஏந்திய துப்பாக்கியோடு எதிரில் வந்து நின்றான் தியாகராஜன்.
ஜீவானந்தம் திடுக்கிட்டுப் போய் எழுந்து உட்கார்ந்தான்.
“ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களை நான் சுட்டு விடமாட்டேன். நான் நிஷா போவதைப் பார்த்து அவளைத் தேடி வந்தேன். இப்போது சௌகரியமாகப் பேசலாம்” என்று கீழே உட்கார்ந்தான் தியாகராஜன்.
“நீ யாரென்று எனக்குத் தெரியும் ஜீவானந்தம். நீ விமானப்படையிலிருந்து தப்பி ஓடி வந்திருக்கும் ஒரு குற்றவாளி” என்று மரியாதையை விட்டுவிட்டு ஆரம்பித்தான் தியாகராஜன். ஜீவானந்தத்தின் முகம் இருண்டது.
“நீ நினைப்பதுபோல் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். அது வெகு அற்பமான விஷயம். உன்னைக் கொன்று விடுவதால் மட்டும் என்னுடைய குடும்ப வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் மனவேதனைகள் போய்விடப் போவதில்லை. ராவுஜியின் பெண்ணை - என் கங்காவை - நீ காதலித்தாய். கடைசியில் அவர் அனுமதிக்காததால் பிறகு விமானப் படையில் சேர்ந்துவிட்டாய்... ராவுஜி அவளை என் தலையில் கட்டினார். ஜீவானந்தம்! நீ படித்தவன். உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்; நீ திருமணம் செய்து கொண்ட ஒரு பெண், கணவனை அடைந்த பிறகும் அவளுடைய பழைய காதலனையே நினைத்துக் கொண்டிருந்தால் உன்னால் சகிக்கமுடியுமா?” என்று இடிபோல் முழங்கினான் தியாகராஜன். அவன் முகம் சிவந்து கண்களும் செம்மையுற்றன.
“சொல்...” என்று அவன் மீண்டும் உறுமியபோது ஜீவானந்தம் தலை குனிந்தான்.
“நீ சகிக்க மாட்டாய். ஆனால் நான் சகித்துக் கொண்டேன். இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒன்று சொல்கிறேன் ஜீவானந்தம்; நான் அந்தப் பெண்ணை நிச்சயித்துக் கொள்ளப் போகுமுன்பே ஊரில் இலேசான வதந்தி எட்டிற்று. நீ வேறு ஜாதி என்பதால் அவர் உனக்கு மறுத்துவிட்டார்; அதற்கு அப்புறம் அவள் தங்கை இருக்கிறாள் என்ற பயம் அவருக்கு என்று எண்ணி உங்கள் காதலுக்காக நான் அவரிடம், ‘உங்கள் இரண்டாவது பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன். உங்கள்முதல் பெண்ணை அவள் நேசித்த இளைஞனுக்கே கொடுத்து விடுங்கள்’ என்று கேட்டேன். அப்படி எதுவும் நடக்கவில்லையென்றும், ஊரில் பொறாமையால் அப்படிக் கதை கட்டிவிடுகிறார்கள் என்றும் அவர் சொன்னார். அவர் மிகவும் நல்லவரானபடியால் அவர் வார்த்தைகளை நான் நம்பினேன். ஆனால் திருமணத்துக்குப் பிறகு என் மனைவியின் பெட்டியில் உன் புகைப்படம் ஒன்று கிடைத்தது. நீ ஒரு விமான விபத்தில்சிக்கித் தப்பித்துவிட்ட செய்தி வெளியாகியிருந்த பத்திரிகையையும் அவள் பெட்டியில் கண்டேன். நீ நம்பினால் நம்பு; நம்பாவிட்டால் போ. அவள் என்னிடம் ஒரு சன்யாஸிபோல் நடந்து கொள்கிறாள். இதயமற்ற எந்திரம்போல் அவள் என்னை மௌனமாக உதாசீனப்படுத்துகிறாள்.”
ஜீவானந்தத்தின் முகத்தைப் பார்த்துப் பேசப் பிடிக்காமல் தலைகுனிந்து கொண்டு பேசலானான் தியாகராஜன்.
“என் வாழ்க்கை பாழைந்துவிட்டது. எனக்கிருக்கும் ஒரே சந்தோஷம் வேட்டைதான். நான் பழிவாங்கப்பட்டவன் போல, மிருங்களைக் கொன்று கொன்று குவிப்பதில் ஜான்ஸனோடு காட்டுக்குப் போகிற வரையில் அலாதித் திருப்தி அடைந்து வந்தேன்... ஜீவானந்தம்! காதல் எவ்வளவு உயர்ந்த சங்கதி என்று எனக்குத் தெரியும். ஆனால் வாழ்வின் பல்வேறு உணர்ச்சிகளுள் அதுவும் ஒன்று. அந்த ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டுஇந்த மாபெரும் வாழ்க்கை ஸ்தாபிக்கப்பட்டுவிடவில்லை. நிஷாவோடு கொஞ்ச நாட்கள் சிரித்துப் பழகியதற்கே நீ இவ்வளவு அவஸ்தைப்படுகிறாய் என்றால், மூன்று வருஷங்களாக நான் பட்டு வரும் வேதனைகள் எப்படி இருக்கும்?”
“தியாகராஜன்! கங்கா... கங்கா அப்படியா இருக்கிறாள்?” என்று திகைப்போடு கேட்டான் ஜீவா.
“அப்படியேதான் இருக்கிறாள். நீ கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னாயே, அவள் எவ்வளவு உயர்ந்த மனைவி என்று. அவ்வளவு உயர்ந்த மனைவியை நான் பூரணமாக அடைய வேண்டும் என்கிற காரணத்துக்காக நான் பொறுமையோடு காத்துக் கொண்டிருக்கிறேன். அன்றயை தினம் காட்டுக்குப் போகும் வரையில் எமனாக வந்திருக்கும் உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவது என்றுதான் நான் தீர்மானித்திருந்தேன். அந்தப் பிரிட்டிஷ்காரர் என் கண்ணைத் திறந்துவிட்டார்.என்னோடு வாழ்ந்தவாறே தன்னைக் கொன்று கொண்டிருக்கும் அந்தப் பைத்தியக்காரிக்காக நான் ஒருகொலைகாரனாக மாற விரும்பவில்லை. நீ சொல் ஜீவானந்தம். காதல் என்றும், தெய்வீகம்என்றும் ஓயாமல் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே - இப்படித்தான் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குரூரமாகத் தண்டிக்கப்படவேண்டுமா?” என்று குமுறியவாறே கேட்டான் தியாகராஜன்.
ஜீவானந்தம் ஏதும் சொல்ல முடியாமல் நெற்றியை இரண்டு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருந்தான். தியாகராஜனின் ஒவ்வொரு வார்த்தையும் நொந்துபோன அவன் உள்ளத்தின் ஒவ்வோர் உருக்கமான புகார்களாக ஒன்றன் பின் ஒன்றாக வந்து தாக்கின.
‘கங்கா...! அவள் என்ன கற்சிலையா? உணர்ச்சியும் இல்லற அறிவுமற்ற இவ்வளவு வன்மையான உள்ளம் படைத்தவளா? இதோ, தியாகராஜன் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டவன் போல் நிற்கிறான். அவளுக்காக, என் பர்சில் இருந்த அவள் போட்டோவைக் கண்டு சகவிமானி கேட்ட கிண்டலான கேள்வியினால் ஆத்திரப்பட்டு அவனைத் தாக்கினேன். அந்த விபத்து என்னால் நேர்ந்தது. விபத்திலிருந்து மீண்டும் நான் விமானப் படைக்குப் போனால் விசாரணையில் என் குற்றம் ருஜுவாகிவிடுமே என்று தலை மறைந்து திரிகிறேன். கையை விட்டுப் போன பொருளுக்காக அவளும் நானும் எங்களைச் சித்திரவதைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். கிழவர் ஜான்ஸன் தம் மனைவியைக் கொன்ற புலியை மன்னித்து விட்டுவிட்டார். அதை வைத்து என்னை நினைக்கையில்... சே, என்ன கேவலம்?’
“தியாகராஜன்...! தியாகராஜன்!” என்று ஜான்ஸன் எங்கிருந்தோ கூவி அழைக்கும் குரலும், மலைவாசிகளின் கூச்சலும் அவன் நினைவுகளை அறுத்தெறிந்தன.
“என்ன? என்ன?” என்று பதறினாள் நிஷா.
“இங்கே இருக்கிறேன் ஸார்” என்று கூச்சலிட்டான், தியாகராஜன். மூவரும் பரபரப்போடு அவர் குரல் வந்த திசையை நோக்கி நடந்தார்கள். அவனைத் தேடிக் கொண்டு வந்த கும்பல் அவர்களைச் சந்தித்தது.
“நான் மிகவும் வருத்தப்படுகிறேன், தியாகராஜன்!” என்று சுருங்கிய முகத்தோடு பீடிகை போட்டார் ஜான்ஸன்.
“என்ன ஸார்?”
“உங்கள் மனைவி தண்ணீர் எடுக்க அருவிக்குப் போயிருந்தபோது ஒரு சிறுத்தை அறைந்து கொன்று விட்டது.”
யாரும் ஒன்றும் பேசவில்லை. வெறும் பேச்சால் பிரதி நிதித்துவப் படுத்த முடியாத உயர்ந்த நினைவுகள் எல்லார் உள்ளத்திலும் இருந்தன.
“நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்” என்று ஆங்கிலத்தில்சிறிய குரலில் கூறினான் தியாகராஜன். சூழ்நிலைக்கு அந்த வார்த்தைகள் வெகு நன்றாக இருந்தன.
பறவைகளின் கூச்சலும், விலங்கினங்களின் ஆரவாரமும் இரவின் அமைதியில் சிறிது நேரத்துக்குள் புதைந்து விட்டன.
மாய விக்னேசுவரர் கோவில் மத்தியான வெய்யிலில், பாரத தேசத்தின் புராதனப் பண்பாடுகளும், தலைமுறை தலைமுறையாகக் காத்து வளர்க்கப்பட்ட புனிதமான தர்மங்களும் தன் மகிமையோடு சிரஞ்சீவியாக நின்று நிலைத்திருப்பது போல் எத்தனையோ வருஷங்களுக்கு முன் கட்டப்பட்டிருந்தும், குலைவுறாமல் கம்பீரமாகப் பிரகாசித்தது. அதைச் சுற்றிலும் ஓடிய அருவி, கற்றுணர்ந்து அடங்கிய ஞானிகள் போல் ஆரவாரமின்றி மெல்ல ஓடிக் கொண்டிருந்தது. ஜீவானந்தம் உயர்ந்த மரம் ஒன்றின் கீழே படுத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
மூங்கில் மரங்களின் இலைகளிலிருந்து வரும் சசலசலவென்ற ரகசியங்களும், வெய்யிலில் சோம்பலோடு காய்ந்தவாறு மந்தமாக வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்து ஒன்றும் சூழ்நிலை அழகாக்கின. திடீரென்று வளையல்களின் ஓசை கேட்டது. எழுந்திராமல் கழுத்தை மட்டும் வளைத்துப் பார்த்தான். நிஷாதான் வந்து கொண்டிருந்தாள். அவனுக்கு உடம்பு எரிந்தது.
“ஏய் நிஷா!” என்று அவளை உரக்கக் கூப்பிட்டான்.
அவனைப் பார்த்துக் கொண்டே கலகலவென்று சிரித்தவாறே அவனருகில் வேகமாக ஓடிவந்தாள் நிஷா.
“உட்கார்” என்று உணர்ச்சியின்றிச் சொன்னான் ஜீவானந்தம்.
“முடியாது” என்று வேடிக்கையாக மறுத்தாள் நிஷா.
“வேடிக்கையெல்லாம் வேண்டாம்; உட்கார்” அவன் குரலில் கடுமை ஏறிற்று. நிஷா விழித்தவாறு உட்கார்ந்தாள்.
“உனக்கு வெட்கமிருக்கிறதா? அந்தத் தியாகராஜன் கல்யாணமானவன். அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள். அவனோடு போய்ச் சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கலாமா?” என்றான் ஜீவா.
“ஏன், என்ன தப்பு?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் நிஷா.
“அவன் தன் மனைவியை அப்புறம் அடியோடு மறந்து விடுவான். நிஷா, உன்னால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாழாவதென்றால், இதோ ஓடும் இந்த அருவியில் உன் கழுத்தை நெரித்துத் தூக்கிப் போடுவேன்” என்று அநாவசியமாக இரைந்தான் ஜீவா.
நிஷா பயந்து போய் அவன் முகத்தைக் குழந்தைபோல் பார்த்தாள்.
“உன்னைக் குற்றம் சொல்லிப் பயன் இல்லை. அவன் அந்த வெறியனுக்குத் தன் கையிலிருக்கும் பொருளின் மதிப்புத் தெரியாது. அவள் எவ்வளவு நல்ல மனைவியென்று தெரியாமல் முரட்டு ஜன்மம்போல் நடந்து கொள்கிறான். அந்தப் பெண், கொட்டிலில், கட்டிவிட்ட பசுவைப்போல் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறாள்.”
“சொன்னதெல்லாம் சரிதான் மிஸ்டர் ஜீவன்! ஆனால் பிற்பகுதிதான் நேர்மாறு” என்று திடீரென்று இடைமறித்தவாறு ஏந்திய துப்பாக்கியோடு எதிரில் வந்து நின்றான் தியாகராஜன்.
ஜீவானந்தம் திடுக்கிட்டுப் போய் எழுந்து உட்கார்ந்தான்.
“ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களை நான் சுட்டு விடமாட்டேன். நான் நிஷா போவதைப் பார்த்து அவளைத் தேடி வந்தேன். இப்போது சௌகரியமாகப் பேசலாம்” என்று கீழே உட்கார்ந்தான் தியாகராஜன்.
“நீ யாரென்று எனக்குத் தெரியும் ஜீவானந்தம். நீ விமானப்படையிலிருந்து தப்பி ஓடி வந்திருக்கும் ஒரு குற்றவாளி” என்று மரியாதையை விட்டுவிட்டு ஆரம்பித்தான் தியாகராஜன். ஜீவானந்தத்தின் முகம் இருண்டது.
“நீ நினைப்பதுபோல் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். அது வெகு அற்பமான விஷயம். உன்னைக் கொன்று விடுவதால் மட்டும் என்னுடைய குடும்ப வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் மனவேதனைகள் போய்விடப் போவதில்லை. ராவுஜியின் பெண்ணை - என் கங்காவை - நீ காதலித்தாய். கடைசியில் அவர் அனுமதிக்காததால் பிறகு விமானப் படையில் சேர்ந்துவிட்டாய்... ராவுஜி அவளை என் தலையில் கட்டினார். ஜீவானந்தம்! நீ படித்தவன். உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்; நீ திருமணம் செய்து கொண்ட ஒரு பெண், கணவனை அடைந்த பிறகும் அவளுடைய பழைய காதலனையே நினைத்துக் கொண்டிருந்தால் உன்னால் சகிக்கமுடியுமா?” என்று இடிபோல் முழங்கினான் தியாகராஜன். அவன் முகம் சிவந்து கண்களும் செம்மையுற்றன.
“சொல்...” என்று அவன் மீண்டும் உறுமியபோது ஜீவானந்தம் தலை குனிந்தான்.
“நீ சகிக்க மாட்டாய். ஆனால் நான் சகித்துக் கொண்டேன். இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒன்று சொல்கிறேன் ஜீவானந்தம்; நான் அந்தப் பெண்ணை நிச்சயித்துக் கொள்ளப் போகுமுன்பே ஊரில் இலேசான வதந்தி எட்டிற்று. நீ வேறு ஜாதி என்பதால் அவர் உனக்கு மறுத்துவிட்டார்; அதற்கு அப்புறம் அவள் தங்கை இருக்கிறாள் என்ற பயம் அவருக்கு என்று எண்ணி உங்கள் காதலுக்காக நான் அவரிடம், ‘உங்கள் இரண்டாவது பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன். உங்கள்முதல் பெண்ணை அவள் நேசித்த இளைஞனுக்கே கொடுத்து விடுங்கள்’ என்று கேட்டேன். அப்படி எதுவும் நடக்கவில்லையென்றும், ஊரில் பொறாமையால் அப்படிக் கதை கட்டிவிடுகிறார்கள் என்றும் அவர் சொன்னார். அவர் மிகவும் நல்லவரானபடியால் அவர் வார்த்தைகளை நான் நம்பினேன். ஆனால் திருமணத்துக்குப் பிறகு என் மனைவியின் பெட்டியில் உன் புகைப்படம் ஒன்று கிடைத்தது. நீ ஒரு விமான விபத்தில்சிக்கித் தப்பித்துவிட்ட செய்தி வெளியாகியிருந்த பத்திரிகையையும் அவள் பெட்டியில் கண்டேன். நீ நம்பினால் நம்பு; நம்பாவிட்டால் போ. அவள் என்னிடம் ஒரு சன்யாஸிபோல் நடந்து கொள்கிறாள். இதயமற்ற எந்திரம்போல் அவள் என்னை மௌனமாக உதாசீனப்படுத்துகிறாள்.”
ஜீவானந்தத்தின் முகத்தைப் பார்த்துப் பேசப் பிடிக்காமல் தலைகுனிந்து கொண்டு பேசலானான் தியாகராஜன்.
“என் வாழ்க்கை பாழைந்துவிட்டது. எனக்கிருக்கும் ஒரே சந்தோஷம் வேட்டைதான். நான் பழிவாங்கப்பட்டவன் போல, மிருங்களைக் கொன்று கொன்று குவிப்பதில் ஜான்ஸனோடு காட்டுக்குப் போகிற வரையில் அலாதித் திருப்தி அடைந்து வந்தேன்... ஜீவானந்தம்! காதல் எவ்வளவு உயர்ந்த சங்கதி என்று எனக்குத் தெரியும். ஆனால் வாழ்வின் பல்வேறு உணர்ச்சிகளுள் அதுவும் ஒன்று. அந்த ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டுஇந்த மாபெரும் வாழ்க்கை ஸ்தாபிக்கப்பட்டுவிடவில்லை. நிஷாவோடு கொஞ்ச நாட்கள் சிரித்துப் பழகியதற்கே நீ இவ்வளவு அவஸ்தைப்படுகிறாய் என்றால், மூன்று வருஷங்களாக நான் பட்டு வரும் வேதனைகள் எப்படி இருக்கும்?”
“தியாகராஜன்! கங்கா... கங்கா அப்படியா இருக்கிறாள்?” என்று திகைப்போடு கேட்டான் ஜீவா.
“அப்படியேதான் இருக்கிறாள். நீ கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னாயே, அவள் எவ்வளவு உயர்ந்த மனைவி என்று. அவ்வளவு உயர்ந்த மனைவியை நான் பூரணமாக அடைய வேண்டும் என்கிற காரணத்துக்காக நான் பொறுமையோடு காத்துக் கொண்டிருக்கிறேன். அன்றயை தினம் காட்டுக்குப் போகும் வரையில் எமனாக வந்திருக்கும் உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவது என்றுதான் நான் தீர்மானித்திருந்தேன். அந்தப் பிரிட்டிஷ்காரர் என் கண்ணைத் திறந்துவிட்டார்.என்னோடு வாழ்ந்தவாறே தன்னைக் கொன்று கொண்டிருக்கும் அந்தப் பைத்தியக்காரிக்காக நான் ஒருகொலைகாரனாக மாற விரும்பவில்லை. நீ சொல் ஜீவானந்தம். காதல் என்றும், தெய்வீகம்என்றும் ஓயாமல் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே - இப்படித்தான் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குரூரமாகத் தண்டிக்கப்படவேண்டுமா?” என்று குமுறியவாறே கேட்டான் தியாகராஜன்.
ஜீவானந்தம் ஏதும் சொல்ல முடியாமல் நெற்றியை இரண்டு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருந்தான். தியாகராஜனின் ஒவ்வொரு வார்த்தையும் நொந்துபோன அவன் உள்ளத்தின் ஒவ்வோர் உருக்கமான புகார்களாக ஒன்றன் பின் ஒன்றாக வந்து தாக்கின.
‘கங்கா...! அவள் என்ன கற்சிலையா? உணர்ச்சியும் இல்லற அறிவுமற்ற இவ்வளவு வன்மையான உள்ளம் படைத்தவளா? இதோ, தியாகராஜன் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டவன் போல் நிற்கிறான். அவளுக்காக, என் பர்சில் இருந்த அவள் போட்டோவைக் கண்டு சகவிமானி கேட்ட கிண்டலான கேள்வியினால் ஆத்திரப்பட்டு அவனைத் தாக்கினேன். அந்த விபத்து என்னால் நேர்ந்தது. விபத்திலிருந்து மீண்டும் நான் விமானப் படைக்குப் போனால் விசாரணையில் என் குற்றம் ருஜுவாகிவிடுமே என்று தலை மறைந்து திரிகிறேன். கையை விட்டுப் போன பொருளுக்காக அவளும் நானும் எங்களைச் சித்திரவதைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். கிழவர் ஜான்ஸன் தம் மனைவியைக் கொன்ற புலியை மன்னித்து விட்டுவிட்டார். அதை வைத்து என்னை நினைக்கையில்... சே, என்ன கேவலம்?’
“தியாகராஜன்...! தியாகராஜன்!” என்று ஜான்ஸன் எங்கிருந்தோ கூவி அழைக்கும் குரலும், மலைவாசிகளின் கூச்சலும் அவன் நினைவுகளை அறுத்தெறிந்தன.
“என்ன? என்ன?” என்று பதறினாள் நிஷா.
“இங்கே இருக்கிறேன் ஸார்” என்று கூச்சலிட்டான், தியாகராஜன். மூவரும் பரபரப்போடு அவர் குரல் வந்த திசையை நோக்கி நடந்தார்கள். அவனைத் தேடிக் கொண்டு வந்த கும்பல் அவர்களைச் சந்தித்தது.
“நான் மிகவும் வருத்தப்படுகிறேன், தியாகராஜன்!” என்று சுருங்கிய முகத்தோடு பீடிகை போட்டார் ஜான்ஸன்.
“என்ன ஸார்?”
“உங்கள் மனைவி தண்ணீர் எடுக்க அருவிக்குப் போயிருந்தபோது ஒரு சிறுத்தை அறைந்து கொன்று விட்டது.”
No comments:
Post a Comment