4
ஜீவாவுக்கும் அப்புறம்தான் வேறு நினைவுகள் வந்தன. ‘என்னடா இது, அசடன் மாதிரி வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டோமே! அந்தப் பெண் என்ன நினைத்தாளோ?’ என்று வருந்தினான். ஆனால் அன்று காலையில் அவனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு புத்துணர்ச்சி பாய்ந்திருந்தது. விடிகாலையில் கண்ட அந்த நேர்த்தியான சித்திரம், அன்றையத் தினத்தின் அனேக அலுவல்களுக்கிடையில் அடிக்கடி ஞாபகம் வந்தது.
மறுநாள் காலையில் அவள் அங்கு வரக்கூடும்என்று எதிர்பார்த்தான். மாறாக, கல்லூரிக்குப் போவதற்காக அவன் புறப்பட்டபோது வீதியில் அவளைக் கண்டான். கையில் புத்தகங்களை அடுக்கியவாறு, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். அடக்கமான, பெருமிதம் கலந்த தளிர்நடையும், சற்றே தாழ்ந்த முகமாக அவளைப் பார்க்கப் பார்க்க ஜீவாவுக்கு முந்தின நாள்காலையின் ஆச்சரியம் சற்றும் மாறவில்லை. நிதானமான நடையோடு அவன் பஸ் ஸ்டாண்டை அடையும்போது அவள் அவனைக் கடந்தாள். நினைவில் கல்வெட்டுப் போல் அந்த முகமும் நடையும் பதிவாகிவிட்டன.
அவர்களுக்குள் ஒருவர் இதயத்தின் பாஷை எப்படி மற்றவரால் புரிந்து கொள்ளப்பட்டது என்று இருவருக்குமே தெரியாது. சிறிது நாட்களில் பார்வையிலும், உதடுகளிலும் ஒரு சௌஜன்யம் நிலவத் தொடங்கியது. ஜீவானந்தம் இளமையின் வசந்த வேளையில் இருந்தாலும் அவனுக்கு மற்றவர்களைப் போல் அனாவசியமான மனக் கிளர்ச்சிகள் ஏற்பட்டதில்லை. அநாதையாக மாமா வீட்டில் தங்கிப்படிக்கிறோம் என்ற எண்ணமும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற உள்ளத் தீயும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கும் யுவதியின் பெருந்தன்மையான தோற்றமும், அருளும் மனத்தின் பிரகாசம் கலந்த புன்னகையும், அவனையறியாமல் அவன் வாழ்வில் ஒரு புது விறுவிறுப்பை ஏற்படுத்தின.
அதிகாலை நேரத்தில் படிப்பதற்காக அவன் புத்தகத்தை விரித்துக் கொண்டு உட்காரும்போது, தலைக்குக் குளித்துவிட்டு அவள் தலையை ஆற்றிக் கொள்ள வருவது நித்திய நிகழ்ச்சியாயிற்று. அவர்கள் மத்தியில் சம்பாஷணை இல்லை. ஏன், இருவர் குரலுமே இருவருக்கும் சரியாகத் தெரியாது. யாராவது கீழே இருந்து கூப்பிட்டால்‘இதோ வர்றேன்’ என்று அவள் போவாள். வெளியில் வீதியில் எப்போதாவது ஓரிரண்டு வார்த்தைகளை அவன் யாரோடாவது பேசும்போது அவள் கேட்டிருப்பாள்.
இரண்டு கஜ தூரத்தில் அவர்கள் நெஞ்சின் ஆசைகள் வளர்ந்தன. வெறும்பார்வையிலும், கண்ணியமான சிரிப்புக்களிலும் ஒப்பற்றதும் சத்தியமானதுமான பிரேமை ஆடம்பரமின்றி வளர்ந்து வந்தது. பின்னால் பேச்சுவாக்கில் அத்தை மூலமாக அவளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டான் ஜீவானந்தம். அவள் மஹாராஷ்டிரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அப்பா ஒரு சப்-ரிஜிஸ்டிரார். மிகவும் நல்லவராம். அவள் பெயர் கங்கா. பெயரைக் கேட்டதும் ஜீவானந்தம் திடுக்கிட்டான். அவளைக் கண்ட முதல் சந்தர்ப்பத்தில் அவளுடைய அழகும் பெருந்தன்மையும் எந்தத் தொனியில் அவன் நெஞ்சில் அலை எழுப்பினவோ அதற்கு ஒத்தாற் போலவே அவள் பெயரும் கங்காதான் என்று கேள்விப்பட்டது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணிற்று. கங்காவுக்கு அப்புறம் நித்யா என்றும், ராதா என்றும் இரண்டு சகோதரிகள் இருப்பதாகவும், இரண்டு பிள்ளைகள் படிப்பதாகவும் அறிந்து கொண்டான்.
விடுமுறை நாட்களில் தென்னந்தோப்புக்கள் அடர்ந்த பாலாற்று மணலில் படிக்கப் போகிறவன் இப்போது மாடியிலேயே விழுந்து கிடந்தான். அவளும் கீழே உள்ள குழந்தைகள் கூச்சலுக்காக, மேலே படிக்க வருவாள். இருவரும் முழுக்க ஒரு பக்கம் படிக்கமாட்டார்கள். அதற்குள் நிமிர்ந்து பார்ப்பார்கள். ஜீவானந்தம் பார்ப்பதையறிந்து வெட்கத்துடன் இங்கிதமான புன்முறுவல் மலர, கங்கா தலையைக் கவிழ்த்துக் கொள்வாள். ஜீவாவும் தன் அடக்கமின்மைக்காக லஜ்ஜையடைந்து புத்தகத்தில் மனத்தைப் பதியவைப்பான். எதுவும் அதிக நேரம் நிற்காது. பளபளவென்று பளிங்கு போல் மின்னும் கங்காவின் கருவிழிகளில் எழுதிக் காட்டப்படும் அவளுடைய மன உணர்ச்சிகளை அலுக்காமல் ஜீவா பார்த்துக் கொண்டிருப்பான்.
இந்த நிலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மணிக்கூண்டு சம்பவத்துக்கு அப்புறம் கங்காவின் வீட்டுக்குச் சென்று படிக்கவும், போக வரவும் சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது. அன்று காலை காலேஜுக்குப் போக பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டு ஜீவா நின்று கொண்டிருந்தான். ஏனோ கங்கா அன்று தாமதித்து வந்தாள். பஸ் ஸ்டாண்டுக்குள் இருக்கும் மணிக்கூண்டில் மணி பார்க்கிற சாக்கில் ஜீவாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே நடந்தாள். இடப்புறம் வந்த பஸ்ஸை அவள் கவனிக்கவில்லை. எதிரில் வந்த சைக்கிளைத் தான் கண்டாள். அதற்கு வழிவிட ஒதுங்கியபோது, பின்னால் ஹார்ன் ஓசை கேட்டது. திகைத்துத் தடுமாறினாள். அதற்குள் சைக்கிள்காரன் பிரேக் பிடிக்க முடியாமல், வந்த வேகத்திலேயே அவள் மீது மோதிவிட்டான். கங்கா தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள். நடுச்சாலையில் புத்தகங்கள் சிதறின. அவள் புத்தகத்தை எடுப்பதற்குள், தன் பேரில் தப்பு வராமல் இருக்க சைக்கிள்காரன் ‘கன்னா பின்னா’ வென்று பேச ஆரம்பித்துவிட்டான்.
“ஏம்மா, கண்ணு தெரியல்லே? நான்தான் எதிரிலேயே மணி அடிச்சுக்கிட்டு வர்றேன். நீ நடு ரோட்டிலே டான்ஸ் ஆடிக்கிணு இப்படியும் அப்படியும் நடக்கிறயே! ஒரு ஓரமாப் போவறதுதானே?” என்று இஷ்டம்போல் பேசிக் கொண்டே போனான்.
ஜீவானந்தம் அவசரமாக அங்கே போனான். கங்கா தலைகுனிந்து கொண்டு புத்தகங்கள் எடுத்துக் கொண்டிருந்தாள். கண்களில் நீர் கலங்கிவிட்டது என்று உதடுகள் துடிப்பதிலேயே தெரிந்தது.
“யோவ், யாரய்யா காட்டானா இருக்கிறே! அவங்க பேரிலே மோதிட்டது இல்லாமே மெரட்டிக்கிட்டு நிக்கறயே? ஏதோ தவறி நடந்துட்டதுன்னு விடாமே, பெண்கள்னு கூடப் பார்க்காமே நடுரோட்டில் கேஸ் விசாரிச்சுட்டுக் கூட்டம் கூட்டறியே? போய்யா சரிதான்” என்று அவனை விரட்டிவிட்டுக் கீழே விழுந்திருந்த புத்தகங்களைப் பொறுக்கிக் கொடுத்தான் ஜீவா.
கங்கா நன்றி ததும்பப் பார்த்தவாறு அவன் கையிலிருந்த புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொண்டாள்.
“உங்களுக்கு அடிபட்டுவிட்டதா, கங்கா?” என்று கேட்டுவிட்டான், அவள் பெயரை உச்சரிக்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமல், நெஞ்சில் சதா ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பெயர் தானாக வந்துவிட்டது.
அவள் நாணத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டு “இல்லை” என்று சிறு குரலில் சொன்னாள்.
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் பள்ளிக் கூடம் வரையில் நான் வரலாமா?”
அதற்கு என்ன பதில் சொல்வது என்று அவள் தீர்மானிப்பதற்குள் ஜீவா அவளோடு நடக்கத் தொடங்கினான்.
“ஹிந்து ஹைஸ்கூல்தானே?”
“ஆமாம்” என்றாள் கங்கா.
“என்ன படிக்கிறீர்கள்?”
“எஸ்.எஸ்.எல்.சி.”
“ஓ! தனியாக வருகிறீர்களே, தம்பி தங்கைகள் எல்லாம்...”
“அவர்கள் கன்கார்டியாவில் படிக்கிறார்கள்...”
முன்னால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் கும்பல் ஒன்று போய்க் கொண்டிருந்தது. கங்கா அவர்களைக் கண்டதும் அவனுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் வினயத்துடன், “நான் அவர்களோடு சேர்ந்து கொள்கிறேன். ரொம்ப நன்றி. இரண்டு பேரையும் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாக நினைப்பார்கள்!” என்றாள்.
“சரி, வரட்டுமா? எனக்கும் பஸ் வந்துவிட்டது” என்று விடைபெற்றுக் கொண்டான் ஜீவா.
அன்று மாலை வாணியம்பாடியிலிருந்து திரும்பியதுமே, பக்கத்து வீட்டில் கூப்பிட்டனுப்பியதாக ஒரு பையன் வந்தான். ஜீவானந்தம் போனான். நெற்றியில் இலேசான விபூதியுடன் சிவந்த மேனியும் புன்னகை செய்யும் கண்களுமாக ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் உட்கார்ந்து ஒரு பைலைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
“நமஸ்காரம்” என்று கைகளைக் கூப்பினான் ஜீவானந்தம்.
“ஓ! வாங்க... நமஸ்காரம். நீங்கள்தான் பக்கத்து வீட்டுப் பிள்ளையா? காலையிலே மணிக்கூண்டுக்கிட்டே நடந்ததைப் பற்றிக் கங்கா சொன்னாள். உட்காருங்கோ ஸார். கூச்சப்படறேங்களே! என்ன ஸார், இந்தக் காலத்து காலேஜ் பிள்ளைங்கள்ளாம், ஊரையே கலக்கறாங்க. நீங்க பக்கத்து வீட்டிலே இருக்கிறதும் தெரியறதில்லே, போறதும் தெரியறதில்லே. அட, உட்காருங்க ஸாருன்னா...” என்று வலுக்கட்டாயப்படுத்திக் உட்கார வைத்தார்.
பிறகு அன்றிரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்பினான் ஜீவானந்தம்.
“பக்கத்திலேதானே இருக்கிறீங்க? அடிக்கடி வீட்டுக்கு வாங்கோ ஸார். இந்தச் சின்ன வயசிலே எவ்வளவோ விஷயம் தெரிஞ்சுண்டு இருக்கீங்க. அடிக்கடி வாங்க. ஏதாச்சும் வாழ்க்கையிலே பெரிசா செய்ய முடியல்லேனாலும் பெரிசாவாவது பேசிட்டிருப்போம் என்ன, வர்றீங்களா? சொல்லுங்கோ ஸார். எனக்கும் ஆபீஸ் ரெகார்டுகளோட மாரடிச்சுட்டு வீட்டுக்கு வந்தால் ஒடம்பு நொடிச்சுப் போறது. உற்சாகமாகப் பேசறதுக்கு ஆள் இருந்துட்டா நான் அவங்களை விடத் தயாரில்லே” என்று விடை கொடுத்து அனுப்பினார் வெங்கோஜி ராவ். மிகவும் நல்ல மனிதர். மனசில் கல்மிஷமின்றிக் குஷியாக வயது, அந்தஸ்து பாராமல் பேசினார். அவர் பேசப் பேச உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது.
அவன் எங்கே வரக் கூச்சப்படுவானோ என்று கருதி, ஆபீஸில் ஏதோ வேலையாக வந்த அவன் மாமாவையும் பார்த்து, “என் மூன்று குழந்தைகளுக்கும் டியூஷன் சொல்லிக் கொடுக்கணும். உங்க பிள்ளையை அனுப்பி வையுங்க” என்று சொல்லிவிட்டார். கங்கா வீட்டுக் கதவு அவனுக்காகத் திறந்து விடப்பட்டது.
ஒரு மணி நேரம் டியூஷன் - கங்காவுக்கும் கூடத்தான் - நடத்திவிட்டு, ராயரம்மாள் போட்டுத் தரும் அற்புதமான காப்பியை மணக்க மணக்கப் பருகிவிட்டு, அவரோடு அரட்டைக் கச்சேரியில் உட்கார்ந்து கொள்வான் ஜீவானந்தம். வானசாஸ்திரத்திலிருந்து வெங்காய ஏற்றுமதிவரை சுவாரஸ்யமாக - பயனுள்ள வகையில் - அவர்கள் அரட்டை செல்லும் வெங்கோஜி வம்பு, தும்பு என்று வீண் விவாதம் பேச மாட்டார். அவர் ஒரு பல்கலைக் களஞ்சியம். வாழ்க்கையில் நிரம்ப அடிபட்டவர். அவருக்கேற்ற மனைவி. கங்காவோடு ஜீவா தனித்திருந்தால் கூடத் துளியும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஜீவா அப்படி நடந்து கொண்டான் என்பதோடு அவர்களும் அவ்வளவு தங்கமானவர்கள்.
டியூஷன் நேரத்திலேயே கங்காவோடு பேச வேண்டியதையெல்லாம் கலகலப்பாகப் பேசிவிடுவான். அந்தப் பெருந்தன்மையான வீட்டில் அவனுடைய மனம் இன்னும் பிரகாசமடைந்தது. வெங்கோஜியின் குடும்பமே, மௌனமாகக் கல்லூரியில் சொல்லிக் கொடுக்கப்படாத பல நல்ல பண்புகளை அவனுக்குச் சொல்லித் தந்தது. கூட கங்காவும் இருந்தாள். மணி விளக்கு குளிர்ந்த சுடர் வீசி ஒளிர்வது போன்று அவள் புன்னகையும் இருந்தது.
அந்த நாட்கள் உண்மையில் தெய்வ நாட்கள்தான். வாழ்க்கையின் எந்த மூலையிலிருந்தாலும், எந்த தேசத்திலிருந்தாலும் புராதனமான அந்த வீட்டில் வசித்த நாட்களை, பண்பாடு மிக்க வெங்கோஜி ராவின் குடும்பத்தை இலேசில் மறக்க முடியாது. எப்போது நினைத்தாலும் சிரித்த உருவமும் கம்பீரமான தோற்றம் உள்ள ராயர் தம்பதிகள் அவன் மனத்துக்கு நிழல் தரும் விருட்சங்கள்போல் தென்பட்டார்கள். குறும்பும், பாசமுமுள்ள நித்யா, குழந்தைகள் கணேஷûம், தாமோதரும். இவர்களையும் மறக்க முடியாது.
அவர்களுக்கெல்லாம் டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பின் அவர்கள் வீட்டில் அவனுக்கு முழு சுதந்திரம் ஏற்பட்டது. ராவுஜி வேலைத் தொந்தரவுள்ளவரான படியால், ஏதேனும் கடைக்குப் போவதாயிருந்தாலும், சினிமாவுக்குக் குடும்பத்தை அழைத்துப் போவதாயிருந்தாலும், ஜீவாதான் போவான். மாமா வீட்டில் அதற்கு ஏதும் நல்ல காலமாக ஆட்சேபணை கிளம்பவில்லை. ராயரம்மாவே ஒரு தடவை வாய்விட்டுச் சொல்லிவிட்டாள்.
“என்னடா, ஜீவு நீ எங்க வீட்டுப் பிள்ளையாய் இல்லாமே போயிட்டியே. பேசாமே கண்ணை மூடிக் கொண்டு கங்காவை உன் கையிலே ஒப்படைச்சுட்டு மறுவேலை பார்ப்பேனே” என்று ராயரம்மாள் சிரித்தவாறே அங்கலாய்த்துக் கொண்டாள். ஜீவா, கங்காவைத் திரும்பிப் பார்த்தான். கண்கள் சந்தித்தன. நாணம் ததும்பக் கங்கா தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
எந்தவிதத் தடைகளுமில்லாமல் கானகத்தில் முற்றிக் காய்ந்த சருகுகளிடையில் தீயைக் குடி வைத்துச் சந்தர்ப்பக்காற்றும் வீசவே காதல் சுயேச்சையாகப் பற்றத் தொடங்கிவிட்டது. இப்படி ஒன்று நேர்ந்துவிடக் கூடாது என்று பொதுவாக எல்லோரும் எதற்குப் பயப்படுவார்களோ அதற்கு ராவுஜி ஜீவானந்தத்தின் குணவிசேஷத்தைப் பார்த்து, பயப்படாமல் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் ஜீவாவின் உள்ளத்தில் கங்கா என்ற காதல் ஜோதி எந்நாளும் அயைõத உன்னத ஜோதியாய்ப் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது.
நடுவில் ஒரு நாள் ராவுஜியின் கண்களுக்கும் அது தென்பட்டது. உணர்த்தப்பட்டது. ஜீவா கண்ணியமாகவே நடந்து கொண்டான். ஆதலால் எந்த விஷமும் அவர் நெஞ்சில் படரவில்லை. கங்காவைப் பெண் பார்க்க வருவதாக யாரோ கடிதம் எழுதி இருந்தார்களாம். முதலில் திருமணமே வேண்டாம் என்று மறுத்தவள் பிறகு அப்பாவிடம் வெட்கத்துடன் ஜீவாவைப் பற்றிச் சொல்லிவிட்டிருக்கிறாள். அன்றைக்கு டியூஷனுக்குப் போனபோது ராவுஜியே வீட்டிலிருந்தார்.
“வா, ஜீவு” என்று அவனைத் தன் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். பின்பு சிரித்த முகத்துடனேயே விஷயத்தை ஆரம்பித்தார்.
“ஜீவு! சின்ன வயசிலே வயசுக்கு ஒத்த அழகான ஆசைகள் எத்தனையோ ஏற்படலாம். அது நிறைவேற முடியாதுன்னு தெரிந்தாலும் வயசும் மனமும் பிடிவாதத்தை விடாது. நான் எதையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன். சமூகக் கட்டுப்பாடு, அதன் வரம்பு, இவைகளெல்லாம் ஆயிரமாயிரம் வருஷங்களாக மனுஷ மனசிலே ஊறிப்படிஞ்சு போனவை. அவைகளெல்லாம் மாறி முன்னேறணும்னா அது எவ்வளவு லேசா? நீ சொல்லு.”
அவன் பேச்சின் பீடிகையே அவர் எதைச் சொல்ல வருகிறார் என்று தெளிவாகிவிட்டது. அதைப் புரிந்து கொண்டாலும் நியாய உணர்ச்சியோடு ஜீவா பேசத் தொடங்கினான்.
“நான் ஒப்புக்கறேன், ஸார். ஆனா, மாற்றம்... புரட்சின்னுல்லாம் வேண்டற நாம் அதற்கு ஊக்கந் தராட்டா அந்தச் சமூகக் கட்டுப்பாடு எப்படித் தானாக அகல முடியும்?”
“தர்க்கரீதியா நீ சொல்றது சரி. ஆனால் சமூக மனப்பான்மை என்பது வளர்ச்சி பெறாதவரைக்கும் ஒரு தனிமனிதன் எந்தத் துணிச்சலான காரியத்திலும் ஈடுபடறது சமூக விரோதமாகத்தானே நெனைக்கப்படறது! சமூகம், இந்தக் கட்டுப்பாடுகளையெல்லாம் ஒரு நன்மையை உத்தேசித்து விதிக்கிறது. அதன் கருத்துப்படி இது நியாயம் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பண பலமோ,ஆள் பலமோ இல்லாத ஒருத்தன் தீவிரமா இருந்தால் அது அவனை அல்லது அவன் குடும்பத்தைத் திரஸ்கரிக்கிறது.”
அவர் பேச்சின் நியாயத்தை உணர்ந்து ஜீவா மௌனமாயிருந்தான்.
“கங்கா நேத்து வர இருந்த ஒரு சம்பந்தத்தைப் பிடிவாதமாக உதறிவிட்டு உன்னைத்தான் நேசிக்கிறதாக எங்கிட்டே சொன்னாள். ஜீவு! உண்மையிலேயே சொல்றேன். எனக்குத் தர்மசங்கடமாப் போச்சு. என் பெண்ணை ஒனக்குக் கொடுக்கறதிலே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? துரதிர்ஷ்டவசமா நான் ஒரு மகாராஷ்டிரன். எனக்குக் கங்கா ஒரே பெண்ணாயிருந்தாலாவது முன்னே சொன்னேன் பாரு, அந்த மாதிரி சமூகத்திலே ஒரு கிளர்ச்சிக்காரனாக, உன்னைப் போன்ற ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக இருந்து பார்ப்பேன். கங்காவுக்கு அப்புறம் நித்யா இருக்கா. அவளுக்கும் விவாகமாக வேண்டும். நான் என்ன செய்வேன்? நீ சொல்லு. என்னைப் போல் ஒரு தகப்பன் ஸ்தானத்திலே நின்று நீ யோசிச்சுப் பார்.”
பகிரங்கமாக அவன் விசாரிக்கப்பட்டபோது ஜீவானந்தத்தினால் ஒன்றும் பேச முடியவில்லை. ராயரம்மாள் புன்சிரிப்புடன் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.
“என்னங்க, அதைப் பிடிச்சிட்டு விசாரிச்சுக்கிட்டு இருக்கேங்க. அது நம்ம பிள்ளை. அதற்கு இத்தனை சொல்லணுமா? ‘வாண்டாண்டா, என் பிள்ளைக்கே என் பெண்ணைத் தர முடியாது’ன்னு ஒரு வார்த்தை சொன்னால் ஒப்புக் கொண்டு போகிறான்.”
ராயரம்மாளின் குளிர்ந்த முகமும், பாசம் நிறைந்த சொற்களும் அவனை இன்னும் வெட்கிக் குறை வைத்தன.
“காப்பி சாப்பிடுடா ஜீவு.”
அதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாததால் ஜீவா காப்பி சாப்பிடத் தொடங்கினான். அவன் சாப்பிட்டானதும், “இதனாலே நம்ம நட்பு முறிஞ்சு போயிட்டதாக நீ நெனைக்கக் கூடாது ஜீவு. நாளைக்குச் சாயந்திரம் நான் உன்னை இங்கே கட்டாயமா எதிர்பார்க்கிறேன். நீ வரல்லைன்னா அங்கேயே வந்து உட்கார்ந்துட்டாலும் உட்கார்ந்துடுவேன்” என்று அவர் சிரித்தவாறு மிரட்டினார்.
மனசில் அழுத்தும் பாரத்தால், ஜீவாவின் கண்கள் கலங்கின. அவன் ராவுஜி தம்பதிகளைக் கைகூப்பி வணங்கி விடை பெற்றுக் கொண்டான். மௌனமாகவே அதன் டியூஷன் நிறுத்தப்பட்டுவிட்டது. வந்து போகும் பெண்ணைப் போல் கங்காவையும், பருவக் கிறுக்கினால் ஏற்பட்ட உணர்ச்சி என்று அவள் காதலையும் அவன் எப்போதும் கருதியதில்லை. எளிய வார்த்தைகளில் உண்மையான அன்போடு தங்கள் குடும்ப நிலையை எடுத்துக் கூறிய ராவுஜியின் வேண்டுகோளையும் அவனால் நிராகரிக்க முடியவில்லை. பொன்னால் விலங்கிட்டிருந்தாலும் முறித்துவிடலாம்; நம்பிக்கை நிறைந்த இதயத்தோடு ராவுஜி அவனுக்குப் பூ விலங்கிட்டிருந்தார். அதை அறுக்க முடியாது. ஜீவாவைப் போல் ஒரு விசுவாசம் நிறைந்த இளைஞன் - ஒரு பண்பு மிக்க குடும்பத்தால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவன் - அதை மீறவும் மாட்டான்.
ஜீவா வாழ்க்கையில் தாய், தந்தையர் இல்லாமையால் எத்தனையோ கஷ்டங்கள் பட்டிருக்கிறான். சொல்லப் போனால் எதிர்பாராத சிக்கலான திருப்பம் இப்போது அவன் எதிரே நின்றது. கங்கா! பழகிக் கொஞ்ச மாதங்களாவதற்குள் அவளை வைத்து எவ்வளவு கோட்டைகள் கட்டிவிட்டான்? நேரிலும் மறைவிலும் ஒவ்வொரு நிமிஷத்திலும் உணர்ச்சிகளால் தீர்மானிப்பது நிதானமாக அவளைப் பற்றிச் சிந்தித்த வேளையெல்லாம் அவளுடைய பிரசின்னம் அவன் வாழ்க்கைக்கு எத்தனை அத்தியாவசியமானது என்று அவனே ஆச்சரியப்படுமளவு, அவள் நிறுவனமாகிவிட்டாள். இன்று அவனே விரும்பினாலும், அவளுடைய ஸ்தானத்திலிருந்து அவளை விலக்க முடியாது. அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல் ஆகிவிட்டது.
மறுநாள் காலையில் அவள் அங்கு வரக்கூடும்என்று எதிர்பார்த்தான். மாறாக, கல்லூரிக்குப் போவதற்காக அவன் புறப்பட்டபோது வீதியில் அவளைக் கண்டான். கையில் புத்தகங்களை அடுக்கியவாறு, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். அடக்கமான, பெருமிதம் கலந்த தளிர்நடையும், சற்றே தாழ்ந்த முகமாக அவளைப் பார்க்கப் பார்க்க ஜீவாவுக்கு முந்தின நாள்காலையின் ஆச்சரியம் சற்றும் மாறவில்லை. நிதானமான நடையோடு அவன் பஸ் ஸ்டாண்டை அடையும்போது அவள் அவனைக் கடந்தாள். நினைவில் கல்வெட்டுப் போல் அந்த முகமும் நடையும் பதிவாகிவிட்டன.
அவர்களுக்குள் ஒருவர் இதயத்தின் பாஷை எப்படி மற்றவரால் புரிந்து கொள்ளப்பட்டது என்று இருவருக்குமே தெரியாது. சிறிது நாட்களில் பார்வையிலும், உதடுகளிலும் ஒரு சௌஜன்யம் நிலவத் தொடங்கியது. ஜீவானந்தம் இளமையின் வசந்த வேளையில் இருந்தாலும் அவனுக்கு மற்றவர்களைப் போல் அனாவசியமான மனக் கிளர்ச்சிகள் ஏற்பட்டதில்லை. அநாதையாக மாமா வீட்டில் தங்கிப்படிக்கிறோம் என்ற எண்ணமும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற உள்ளத் தீயும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கும் யுவதியின் பெருந்தன்மையான தோற்றமும், அருளும் மனத்தின் பிரகாசம் கலந்த புன்னகையும், அவனையறியாமல் அவன் வாழ்வில் ஒரு புது விறுவிறுப்பை ஏற்படுத்தின.
அதிகாலை நேரத்தில் படிப்பதற்காக அவன் புத்தகத்தை விரித்துக் கொண்டு உட்காரும்போது, தலைக்குக் குளித்துவிட்டு அவள் தலையை ஆற்றிக் கொள்ள வருவது நித்திய நிகழ்ச்சியாயிற்று. அவர்கள் மத்தியில் சம்பாஷணை இல்லை. ஏன், இருவர் குரலுமே இருவருக்கும் சரியாகத் தெரியாது. யாராவது கீழே இருந்து கூப்பிட்டால்‘இதோ வர்றேன்’ என்று அவள் போவாள். வெளியில் வீதியில் எப்போதாவது ஓரிரண்டு வார்த்தைகளை அவன் யாரோடாவது பேசும்போது அவள் கேட்டிருப்பாள்.
இரண்டு கஜ தூரத்தில் அவர்கள் நெஞ்சின் ஆசைகள் வளர்ந்தன. வெறும்பார்வையிலும், கண்ணியமான சிரிப்புக்களிலும் ஒப்பற்றதும் சத்தியமானதுமான பிரேமை ஆடம்பரமின்றி வளர்ந்து வந்தது. பின்னால் பேச்சுவாக்கில் அத்தை மூலமாக அவளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டான் ஜீவானந்தம். அவள் மஹாராஷ்டிரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அப்பா ஒரு சப்-ரிஜிஸ்டிரார். மிகவும் நல்லவராம். அவள் பெயர் கங்கா. பெயரைக் கேட்டதும் ஜீவானந்தம் திடுக்கிட்டான். அவளைக் கண்ட முதல் சந்தர்ப்பத்தில் அவளுடைய அழகும் பெருந்தன்மையும் எந்தத் தொனியில் அவன் நெஞ்சில் அலை எழுப்பினவோ அதற்கு ஒத்தாற் போலவே அவள் பெயரும் கங்காதான் என்று கேள்விப்பட்டது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணிற்று. கங்காவுக்கு அப்புறம் நித்யா என்றும், ராதா என்றும் இரண்டு சகோதரிகள் இருப்பதாகவும், இரண்டு பிள்ளைகள் படிப்பதாகவும் அறிந்து கொண்டான்.
விடுமுறை நாட்களில் தென்னந்தோப்புக்கள் அடர்ந்த பாலாற்று மணலில் படிக்கப் போகிறவன் இப்போது மாடியிலேயே விழுந்து கிடந்தான். அவளும் கீழே உள்ள குழந்தைகள் கூச்சலுக்காக, மேலே படிக்க வருவாள். இருவரும் முழுக்க ஒரு பக்கம் படிக்கமாட்டார்கள். அதற்குள் நிமிர்ந்து பார்ப்பார்கள். ஜீவானந்தம் பார்ப்பதையறிந்து வெட்கத்துடன் இங்கிதமான புன்முறுவல் மலர, கங்கா தலையைக் கவிழ்த்துக் கொள்வாள். ஜீவாவும் தன் அடக்கமின்மைக்காக லஜ்ஜையடைந்து புத்தகத்தில் மனத்தைப் பதியவைப்பான். எதுவும் அதிக நேரம் நிற்காது. பளபளவென்று பளிங்கு போல் மின்னும் கங்காவின் கருவிழிகளில் எழுதிக் காட்டப்படும் அவளுடைய மன உணர்ச்சிகளை அலுக்காமல் ஜீவா பார்த்துக் கொண்டிருப்பான்.
இந்த நிலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மணிக்கூண்டு சம்பவத்துக்கு அப்புறம் கங்காவின் வீட்டுக்குச் சென்று படிக்கவும், போக வரவும் சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது. அன்று காலை காலேஜுக்குப் போக பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டு ஜீவா நின்று கொண்டிருந்தான். ஏனோ கங்கா அன்று தாமதித்து வந்தாள். பஸ் ஸ்டாண்டுக்குள் இருக்கும் மணிக்கூண்டில் மணி பார்க்கிற சாக்கில் ஜீவாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே நடந்தாள். இடப்புறம் வந்த பஸ்ஸை அவள் கவனிக்கவில்லை. எதிரில் வந்த சைக்கிளைத் தான் கண்டாள். அதற்கு வழிவிட ஒதுங்கியபோது, பின்னால் ஹார்ன் ஓசை கேட்டது. திகைத்துத் தடுமாறினாள். அதற்குள் சைக்கிள்காரன் பிரேக் பிடிக்க முடியாமல், வந்த வேகத்திலேயே அவள் மீது மோதிவிட்டான். கங்கா தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள். நடுச்சாலையில் புத்தகங்கள் சிதறின. அவள் புத்தகத்தை எடுப்பதற்குள், தன் பேரில் தப்பு வராமல் இருக்க சைக்கிள்காரன் ‘கன்னா பின்னா’ வென்று பேச ஆரம்பித்துவிட்டான்.
“ஏம்மா, கண்ணு தெரியல்லே? நான்தான் எதிரிலேயே மணி அடிச்சுக்கிட்டு வர்றேன். நீ நடு ரோட்டிலே டான்ஸ் ஆடிக்கிணு இப்படியும் அப்படியும் நடக்கிறயே! ஒரு ஓரமாப் போவறதுதானே?” என்று இஷ்டம்போல் பேசிக் கொண்டே போனான்.
ஜீவானந்தம் அவசரமாக அங்கே போனான். கங்கா தலைகுனிந்து கொண்டு புத்தகங்கள் எடுத்துக் கொண்டிருந்தாள். கண்களில் நீர் கலங்கிவிட்டது என்று உதடுகள் துடிப்பதிலேயே தெரிந்தது.
“யோவ், யாரய்யா காட்டானா இருக்கிறே! அவங்க பேரிலே மோதிட்டது இல்லாமே மெரட்டிக்கிட்டு நிக்கறயே? ஏதோ தவறி நடந்துட்டதுன்னு விடாமே, பெண்கள்னு கூடப் பார்க்காமே நடுரோட்டில் கேஸ் விசாரிச்சுட்டுக் கூட்டம் கூட்டறியே? போய்யா சரிதான்” என்று அவனை விரட்டிவிட்டுக் கீழே விழுந்திருந்த புத்தகங்களைப் பொறுக்கிக் கொடுத்தான் ஜீவா.
கங்கா நன்றி ததும்பப் பார்த்தவாறு அவன் கையிலிருந்த புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொண்டாள்.
“உங்களுக்கு அடிபட்டுவிட்டதா, கங்கா?” என்று கேட்டுவிட்டான், அவள் பெயரை உச்சரிக்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமல், நெஞ்சில் சதா ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பெயர் தானாக வந்துவிட்டது.
அவள் நாணத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டு “இல்லை” என்று சிறு குரலில் சொன்னாள்.
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் பள்ளிக் கூடம் வரையில் நான் வரலாமா?”
அதற்கு என்ன பதில் சொல்வது என்று அவள் தீர்மானிப்பதற்குள் ஜீவா அவளோடு நடக்கத் தொடங்கினான்.
“ஹிந்து ஹைஸ்கூல்தானே?”
“ஆமாம்” என்றாள் கங்கா.
“என்ன படிக்கிறீர்கள்?”
“எஸ்.எஸ்.எல்.சி.”
“ஓ! தனியாக வருகிறீர்களே, தம்பி தங்கைகள் எல்லாம்...”
“அவர்கள் கன்கார்டியாவில் படிக்கிறார்கள்...”
முன்னால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் கும்பல் ஒன்று போய்க் கொண்டிருந்தது. கங்கா அவர்களைக் கண்டதும் அவனுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் வினயத்துடன், “நான் அவர்களோடு சேர்ந்து கொள்கிறேன். ரொம்ப நன்றி. இரண்டு பேரையும் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாக நினைப்பார்கள்!” என்றாள்.
“சரி, வரட்டுமா? எனக்கும் பஸ் வந்துவிட்டது” என்று விடைபெற்றுக் கொண்டான் ஜீவா.
அன்று மாலை வாணியம்பாடியிலிருந்து திரும்பியதுமே, பக்கத்து வீட்டில் கூப்பிட்டனுப்பியதாக ஒரு பையன் வந்தான். ஜீவானந்தம் போனான். நெற்றியில் இலேசான விபூதியுடன் சிவந்த மேனியும் புன்னகை செய்யும் கண்களுமாக ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் உட்கார்ந்து ஒரு பைலைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
“நமஸ்காரம்” என்று கைகளைக் கூப்பினான் ஜீவானந்தம்.
“ஓ! வாங்க... நமஸ்காரம். நீங்கள்தான் பக்கத்து வீட்டுப் பிள்ளையா? காலையிலே மணிக்கூண்டுக்கிட்டே நடந்ததைப் பற்றிக் கங்கா சொன்னாள். உட்காருங்கோ ஸார். கூச்சப்படறேங்களே! என்ன ஸார், இந்தக் காலத்து காலேஜ் பிள்ளைங்கள்ளாம், ஊரையே கலக்கறாங்க. நீங்க பக்கத்து வீட்டிலே இருக்கிறதும் தெரியறதில்லே, போறதும் தெரியறதில்லே. அட, உட்காருங்க ஸாருன்னா...” என்று வலுக்கட்டாயப்படுத்திக் உட்கார வைத்தார்.
பிறகு அன்றிரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்பினான் ஜீவானந்தம்.
“பக்கத்திலேதானே இருக்கிறீங்க? அடிக்கடி வீட்டுக்கு வாங்கோ ஸார். இந்தச் சின்ன வயசிலே எவ்வளவோ விஷயம் தெரிஞ்சுண்டு இருக்கீங்க. அடிக்கடி வாங்க. ஏதாச்சும் வாழ்க்கையிலே பெரிசா செய்ய முடியல்லேனாலும் பெரிசாவாவது பேசிட்டிருப்போம் என்ன, வர்றீங்களா? சொல்லுங்கோ ஸார். எனக்கும் ஆபீஸ் ரெகார்டுகளோட மாரடிச்சுட்டு வீட்டுக்கு வந்தால் ஒடம்பு நொடிச்சுப் போறது. உற்சாகமாகப் பேசறதுக்கு ஆள் இருந்துட்டா நான் அவங்களை விடத் தயாரில்லே” என்று விடை கொடுத்து அனுப்பினார் வெங்கோஜி ராவ். மிகவும் நல்ல மனிதர். மனசில் கல்மிஷமின்றிக் குஷியாக வயது, அந்தஸ்து பாராமல் பேசினார். அவர் பேசப் பேச உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது.
அவன் எங்கே வரக் கூச்சப்படுவானோ என்று கருதி, ஆபீஸில் ஏதோ வேலையாக வந்த அவன் மாமாவையும் பார்த்து, “என் மூன்று குழந்தைகளுக்கும் டியூஷன் சொல்லிக் கொடுக்கணும். உங்க பிள்ளையை அனுப்பி வையுங்க” என்று சொல்லிவிட்டார். கங்கா வீட்டுக் கதவு அவனுக்காகத் திறந்து விடப்பட்டது.
ஒரு மணி நேரம் டியூஷன் - கங்காவுக்கும் கூடத்தான் - நடத்திவிட்டு, ராயரம்மாள் போட்டுத் தரும் அற்புதமான காப்பியை மணக்க மணக்கப் பருகிவிட்டு, அவரோடு அரட்டைக் கச்சேரியில் உட்கார்ந்து கொள்வான் ஜீவானந்தம். வானசாஸ்திரத்திலிருந்து வெங்காய ஏற்றுமதிவரை சுவாரஸ்யமாக - பயனுள்ள வகையில் - அவர்கள் அரட்டை செல்லும் வெங்கோஜி வம்பு, தும்பு என்று வீண் விவாதம் பேச மாட்டார். அவர் ஒரு பல்கலைக் களஞ்சியம். வாழ்க்கையில் நிரம்ப அடிபட்டவர். அவருக்கேற்ற மனைவி. கங்காவோடு ஜீவா தனித்திருந்தால் கூடத் துளியும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஜீவா அப்படி நடந்து கொண்டான் என்பதோடு அவர்களும் அவ்வளவு தங்கமானவர்கள்.
டியூஷன் நேரத்திலேயே கங்காவோடு பேச வேண்டியதையெல்லாம் கலகலப்பாகப் பேசிவிடுவான். அந்தப் பெருந்தன்மையான வீட்டில் அவனுடைய மனம் இன்னும் பிரகாசமடைந்தது. வெங்கோஜியின் குடும்பமே, மௌனமாகக் கல்லூரியில் சொல்லிக் கொடுக்கப்படாத பல நல்ல பண்புகளை அவனுக்குச் சொல்லித் தந்தது. கூட கங்காவும் இருந்தாள். மணி விளக்கு குளிர்ந்த சுடர் வீசி ஒளிர்வது போன்று அவள் புன்னகையும் இருந்தது.
அந்த நாட்கள் உண்மையில் தெய்வ நாட்கள்தான். வாழ்க்கையின் எந்த மூலையிலிருந்தாலும், எந்த தேசத்திலிருந்தாலும் புராதனமான அந்த வீட்டில் வசித்த நாட்களை, பண்பாடு மிக்க வெங்கோஜி ராவின் குடும்பத்தை இலேசில் மறக்க முடியாது. எப்போது நினைத்தாலும் சிரித்த உருவமும் கம்பீரமான தோற்றம் உள்ள ராயர் தம்பதிகள் அவன் மனத்துக்கு நிழல் தரும் விருட்சங்கள்போல் தென்பட்டார்கள். குறும்பும், பாசமுமுள்ள நித்யா, குழந்தைகள் கணேஷûம், தாமோதரும். இவர்களையும் மறக்க முடியாது.
அவர்களுக்கெல்லாம் டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பின் அவர்கள் வீட்டில் அவனுக்கு முழு சுதந்திரம் ஏற்பட்டது. ராவுஜி வேலைத் தொந்தரவுள்ளவரான படியால், ஏதேனும் கடைக்குப் போவதாயிருந்தாலும், சினிமாவுக்குக் குடும்பத்தை அழைத்துப் போவதாயிருந்தாலும், ஜீவாதான் போவான். மாமா வீட்டில் அதற்கு ஏதும் நல்ல காலமாக ஆட்சேபணை கிளம்பவில்லை. ராயரம்மாவே ஒரு தடவை வாய்விட்டுச் சொல்லிவிட்டாள்.
“என்னடா, ஜீவு நீ எங்க வீட்டுப் பிள்ளையாய் இல்லாமே போயிட்டியே. பேசாமே கண்ணை மூடிக் கொண்டு கங்காவை உன் கையிலே ஒப்படைச்சுட்டு மறுவேலை பார்ப்பேனே” என்று ராயரம்மாள் சிரித்தவாறே அங்கலாய்த்துக் கொண்டாள். ஜீவா, கங்காவைத் திரும்பிப் பார்த்தான். கண்கள் சந்தித்தன. நாணம் ததும்பக் கங்கா தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
எந்தவிதத் தடைகளுமில்லாமல் கானகத்தில் முற்றிக் காய்ந்த சருகுகளிடையில் தீயைக் குடி வைத்துச் சந்தர்ப்பக்காற்றும் வீசவே காதல் சுயேச்சையாகப் பற்றத் தொடங்கிவிட்டது. இப்படி ஒன்று நேர்ந்துவிடக் கூடாது என்று பொதுவாக எல்லோரும் எதற்குப் பயப்படுவார்களோ அதற்கு ராவுஜி ஜீவானந்தத்தின் குணவிசேஷத்தைப் பார்த்து, பயப்படாமல் நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் ஜீவாவின் உள்ளத்தில் கங்கா என்ற காதல் ஜோதி எந்நாளும் அயைõத உன்னத ஜோதியாய்ப் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது.
நடுவில் ஒரு நாள் ராவுஜியின் கண்களுக்கும் அது தென்பட்டது. உணர்த்தப்பட்டது. ஜீவா கண்ணியமாகவே நடந்து கொண்டான். ஆதலால் எந்த விஷமும் அவர் நெஞ்சில் படரவில்லை. கங்காவைப் பெண் பார்க்க வருவதாக யாரோ கடிதம் எழுதி இருந்தார்களாம். முதலில் திருமணமே வேண்டாம் என்று மறுத்தவள் பிறகு அப்பாவிடம் வெட்கத்துடன் ஜீவாவைப் பற்றிச் சொல்லிவிட்டிருக்கிறாள். அன்றைக்கு டியூஷனுக்குப் போனபோது ராவுஜியே வீட்டிலிருந்தார்.
“வா, ஜீவு” என்று அவனைத் தன் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். பின்பு சிரித்த முகத்துடனேயே விஷயத்தை ஆரம்பித்தார்.
“ஜீவு! சின்ன வயசிலே வயசுக்கு ஒத்த அழகான ஆசைகள் எத்தனையோ ஏற்படலாம். அது நிறைவேற முடியாதுன்னு தெரிந்தாலும் வயசும் மனமும் பிடிவாதத்தை விடாது. நான் எதையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன். சமூகக் கட்டுப்பாடு, அதன் வரம்பு, இவைகளெல்லாம் ஆயிரமாயிரம் வருஷங்களாக மனுஷ மனசிலே ஊறிப்படிஞ்சு போனவை. அவைகளெல்லாம் மாறி முன்னேறணும்னா அது எவ்வளவு லேசா? நீ சொல்லு.”
அவன் பேச்சின் பீடிகையே அவர் எதைச் சொல்ல வருகிறார் என்று தெளிவாகிவிட்டது. அதைப் புரிந்து கொண்டாலும் நியாய உணர்ச்சியோடு ஜீவா பேசத் தொடங்கினான்.
“நான் ஒப்புக்கறேன், ஸார். ஆனா, மாற்றம்... புரட்சின்னுல்லாம் வேண்டற நாம் அதற்கு ஊக்கந் தராட்டா அந்தச் சமூகக் கட்டுப்பாடு எப்படித் தானாக அகல முடியும்?”
“தர்க்கரீதியா நீ சொல்றது சரி. ஆனால் சமூக மனப்பான்மை என்பது வளர்ச்சி பெறாதவரைக்கும் ஒரு தனிமனிதன் எந்தத் துணிச்சலான காரியத்திலும் ஈடுபடறது சமூக விரோதமாகத்தானே நெனைக்கப்படறது! சமூகம், இந்தக் கட்டுப்பாடுகளையெல்லாம் ஒரு நன்மையை உத்தேசித்து விதிக்கிறது. அதன் கருத்துப்படி இது நியாயம் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பண பலமோ,ஆள் பலமோ இல்லாத ஒருத்தன் தீவிரமா இருந்தால் அது அவனை அல்லது அவன் குடும்பத்தைத் திரஸ்கரிக்கிறது.”
அவர் பேச்சின் நியாயத்தை உணர்ந்து ஜீவா மௌனமாயிருந்தான்.
“கங்கா நேத்து வர இருந்த ஒரு சம்பந்தத்தைப் பிடிவாதமாக உதறிவிட்டு உன்னைத்தான் நேசிக்கிறதாக எங்கிட்டே சொன்னாள். ஜீவு! உண்மையிலேயே சொல்றேன். எனக்குத் தர்மசங்கடமாப் போச்சு. என் பெண்ணை ஒனக்குக் கொடுக்கறதிலே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? துரதிர்ஷ்டவசமா நான் ஒரு மகாராஷ்டிரன். எனக்குக் கங்கா ஒரே பெண்ணாயிருந்தாலாவது முன்னே சொன்னேன் பாரு, அந்த மாதிரி சமூகத்திலே ஒரு கிளர்ச்சிக்காரனாக, உன்னைப் போன்ற ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக இருந்து பார்ப்பேன். கங்காவுக்கு அப்புறம் நித்யா இருக்கா. அவளுக்கும் விவாகமாக வேண்டும். நான் என்ன செய்வேன்? நீ சொல்லு. என்னைப் போல் ஒரு தகப்பன் ஸ்தானத்திலே நின்று நீ யோசிச்சுப் பார்.”
பகிரங்கமாக அவன் விசாரிக்கப்பட்டபோது ஜீவானந்தத்தினால் ஒன்றும் பேச முடியவில்லை. ராயரம்மாள் புன்சிரிப்புடன் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.
“என்னங்க, அதைப் பிடிச்சிட்டு விசாரிச்சுக்கிட்டு இருக்கேங்க. அது நம்ம பிள்ளை. அதற்கு இத்தனை சொல்லணுமா? ‘வாண்டாண்டா, என் பிள்ளைக்கே என் பெண்ணைத் தர முடியாது’ன்னு ஒரு வார்த்தை சொன்னால் ஒப்புக் கொண்டு போகிறான்.”
ராயரம்மாளின் குளிர்ந்த முகமும், பாசம் நிறைந்த சொற்களும் அவனை இன்னும் வெட்கிக் குறை வைத்தன.
“காப்பி சாப்பிடுடா ஜீவு.”
அதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாததால் ஜீவா காப்பி சாப்பிடத் தொடங்கினான். அவன் சாப்பிட்டானதும், “இதனாலே நம்ம நட்பு முறிஞ்சு போயிட்டதாக நீ நெனைக்கக் கூடாது ஜீவு. நாளைக்குச் சாயந்திரம் நான் உன்னை இங்கே கட்டாயமா எதிர்பார்க்கிறேன். நீ வரல்லைன்னா அங்கேயே வந்து உட்கார்ந்துட்டாலும் உட்கார்ந்துடுவேன்” என்று அவர் சிரித்தவாறு மிரட்டினார்.
மனசில் அழுத்தும் பாரத்தால், ஜீவாவின் கண்கள் கலங்கின. அவன் ராவுஜி தம்பதிகளைக் கைகூப்பி வணங்கி விடை பெற்றுக் கொண்டான். மௌனமாகவே அதன் டியூஷன் நிறுத்தப்பட்டுவிட்டது. வந்து போகும் பெண்ணைப் போல் கங்காவையும், பருவக் கிறுக்கினால் ஏற்பட்ட உணர்ச்சி என்று அவள் காதலையும் அவன் எப்போதும் கருதியதில்லை. எளிய வார்த்தைகளில் உண்மையான அன்போடு தங்கள் குடும்ப நிலையை எடுத்துக் கூறிய ராவுஜியின் வேண்டுகோளையும் அவனால் நிராகரிக்க முடியவில்லை. பொன்னால் விலங்கிட்டிருந்தாலும் முறித்துவிடலாம்; நம்பிக்கை நிறைந்த இதயத்தோடு ராவுஜி அவனுக்குப் பூ விலங்கிட்டிருந்தார். அதை அறுக்க முடியாது. ஜீவாவைப் போல் ஒரு விசுவாசம் நிறைந்த இளைஞன் - ஒரு பண்பு மிக்க குடும்பத்தால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவன் - அதை மீறவும் மாட்டான்.
ஜீவா வாழ்க்கையில் தாய், தந்தையர் இல்லாமையால் எத்தனையோ கஷ்டங்கள் பட்டிருக்கிறான். சொல்லப் போனால் எதிர்பாராத சிக்கலான திருப்பம் இப்போது அவன் எதிரே நின்றது. கங்கா! பழகிக் கொஞ்ச மாதங்களாவதற்குள் அவளை வைத்து எவ்வளவு கோட்டைகள் கட்டிவிட்டான்? நேரிலும் மறைவிலும் ஒவ்வொரு நிமிஷத்திலும் உணர்ச்சிகளால் தீர்மானிப்பது நிதானமாக அவளைப் பற்றிச் சிந்தித்த வேளையெல்லாம் அவளுடைய பிரசின்னம் அவன் வாழ்க்கைக்கு எத்தனை அத்தியாவசியமானது என்று அவனே ஆச்சரியப்படுமளவு, அவள் நிறுவனமாகிவிட்டாள். இன்று அவனே விரும்பினாலும், அவளுடைய ஸ்தானத்திலிருந்து அவளை விலக்க முடியாது. அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல் ஆகிவிட்டது.
No comments:
Post a Comment