7
“கங்கா!” என்று கத்தியவாறே வீட்டை நோக்கி ஓடினான் தியாகராஜன். ஜீவானந்தம் பிரமை பிடித்தவன் போல் நெடுமரமாக நின்றான். அவன் செவிகளையே அவனால் நம்ப முடியவில்லை. நேரமாக ஆகத்தான் அவனால் சுயநிலைக்கு வர முடிந்தது.
கங்கா! அந்தப் பெண் வாழவில்லை. வாழவும் விடவில்லை. என்னாலேயே சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இது தண்டனையாக விதிக்கப்பட்டதா?
ஜீவானந்தம் கங்காவின் அழகிய உருவம் சிறுத்தையாமல் சின்னாபின்னாப்படுத்தப்படுத்தப்பட்டதையோ, அவளுக்கு நடந்த ஈமச் சடங்குகளையோ அல்லது அந்தச் சடங்குக்கு வந்த அவள் பெற்றோர், மலைக்கு வந்ததை அறிந்தும் அவர்களையோ பார்க்க அவன் விரும்பவில்லை.
அவனுடைய குடிசையின் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு அதன் சிறிய ஜன்னல் வழியே தெரியும் காட்டைப் பார்த்தவாறே அவனுடைய வாழ்க்கையைக் கவ்வியிருந்த பேரிருளையும், கங்காவையும் பற்றித் துக்கங்களால் சக்தியிழந்து, உணர்ச்சிகளே மரத்துப்போன மனத்தில் எண்ணிக் கொண்டிருந்தான்.
கங்காவின் இதயத்தில் அவன் மூட்டிவிட்ட அக்கினி, அணையாத காட்டுத் தீயாகிக் கடைசி வரையில் நின்று எரிந்து, உதிர்ந்த சாம்பல் குவியலில் அவள் அணைந்து விட்டாள். எத்தனை புனித அர்த்தத்தில் அவர்கள் உறவு முதன் முதலில் கொழுந்துவிட்டுக் கிளம்பிற்றோ, அந்த அர்த்தமே ஜீவானந்தத்துக்கு இப்போது நினைக்கப் பெரிதும் வருத்தத்தைத் தந்தது.
தியாகராஜன்! அவன்தான் எவ்வளவு பொறுமைசாலி; துப்பாக்கியும் கையுமாகத் திரிபவனாயிருந்தாலும் அவன் உள்ளத்தில்தான் எப்படிப்பட்ட மனிதத்தன்மை நிலவியிருந்தது; கங்கா மாறக்கூடும் என்று அவன் பொறுத்திருந்திருக்கிறான். சன்யாஸியைப் போல் கூடவாழும் ஒரு மனைவியைக் காலம் சிகிச்சைப்படுத்தும் என்பதற்காகச் சகித்து வந்திருக்கிறான். அவன் கேட்ட கேள்விகள், வலுவான இரும்புச் சங்கிலிகளாக ஜீவானந்தத்தைச் சுற்றிப் பிணைத்தன.
‘காதல் என்றும் தெய்வீகம் என்றும் பேசுகிறீர்களே - அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் குரூரமாகத் தண்டிக்கப்பட வேண்டுமா?’
‘இல்லை தியாகராஜன், இல்லை! உங்களைப் போன்ற மனிதர்களும் இந்தப்பூமியில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது வாழவேண்டும்; அவர்களை வாழ்விக்க வேண்டும்.’
‘மிருதுவான உணர்ச்சிகளும், மாதுரியமான உள்ளமும் படைத்த கங்கா, தியாகராஜனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெல்லாம் என்னைக் குற்றவாளியாக்கி விட்டிருக்கிறாளே!’
தலையணையின் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு, கண்ணீரும், ஓசையும் வெளியே தெரியாமல் ஜீவானந்தம் அழுதான்.
கங்காவின் உள்ளத்தில் பற்றியிருந்த அக்னி, யாருக்கும் உபயோகப்படாமல் வெறும் உணர்ச்சிகளின் மூர்த்தண்யத்தினாலேயே யாரைக் கையெடுத்துக் கும்பிட வேண்டுமோ அவனைப் பொசுக்கி வந்திருக்கிறது. அவளுடைய காதல் எவ்வளவு மேன்மையானது என்று ஜீவானந்தத்தால் உணரப்பட்டாலும், அதைப் பெருமையோடு அங்கீகரிக்க இயலவில்லை. பெண் வாழ்விப்பவள்தான். தன் உணர்ச்சிகளை, உள்ளத்தை, தன் வாழ்வையே மற்றவர்களை வாழ்விப்பதில்தான் அவள் செலவிடுகிறாள்.
“கங்கா! ஐயோ கங்கா!” ஜீவா அவளுக்காக, அவளுடைய தவறுகளுக்காக வருந்திக் கொண்டான்.
“நான் இங்கிலாந்துக்குப் போவதாக முடிவு செய்து விட்டேன்” என்று தமதுஅறையில் உட்கார்ந்திருந்த அனைவரிடமும் கூறினார் ஜான்ஸன். தியாகராஜன் தெம்பும் சோபையும் இழந்த முகத்தை உயர்த்தி அவரை நிமிர்ந்து பார்த்தான். ஜீவானந்தத்திடம் அவர் இவ்விஷயத்தை ஏற்கனவே சொல்லிவிட்டிருந்ததால் அவன் முகத்தில் எந்தச் சலனமுமில்லை.
ஜக்கோடன் மிகவும் கவலையோடு அவரை நிமிர்ந்து பார்த்தான். எல்லோரையும் ஒருமுறை நிதானமாகப் பார்த்தவாறே, “என் கூடவே என் மகள் நிஷாவும் வருகிறாள்” என்றார் ஜான்ஸன்.
“என்ன?” என்று ஆச்சரியத்தோடு ஜீவானந்தமும் தியாகராஜனும் ஒரே சமயத்தில் கேட்டார்கள்.
“ஆம்! நிஷா என் மகள்தான். இங்கு ஒரு மலைஜாதிப் பெண்ணுக்குப் பிறந்தாலும் அவளுடைய தந்தை நான்தான். ஏற்கனவே சொன்னாற்போல் நான் என் வாழ்நாளில் மேரிக்குச் செய்த இந்தப் பெரிய துரோகத்தையும் அவள் மன்னித்துவிட்டாள். இந்தக் குழந்தையைப் பெற்றுவிட்டு, நிஷாவின் தாய் காலமாகிவிட்டாள். மேரியின் இஷ்டப்பிரகாரம் நான் அந்தப்பெண் குழந்தையை ஜக்கோடனிடம் ஒப்படைத்துவிட்டேன். மேரிக்கு அப்புறம் அவள் இஷ்ட விரோதமாக நான் நடந்துகொள்ளப் பிரியப்படவில்லை. அவள் முழுக்க ஒரு மலைஜாதிப் பெண்ணாகவே வளர்ந்துவிட்டாள். ஆனால், அவளை என் தேசத்தில் நான் சுலபமாகத் திருத்திக் கொள்ளமுடியும். என் கூடவே ஒரு தமிழ் பேசும் மகளை அழைத்துக் கொண்டு நான் தாய்நாட்டுக்குத் திரும்புகிறேன்” என்றார்.
அவருடைய மேன்மை மிக்க பண்பாடும், ஒருமுறை செய்த தவறுக்காக வருந்தும் கழிவிரக்கமும் எல்லோர் நெஞ்சையும் உருக்கிவிட்டன.தியாகராஜன் ஜீவானந்தத்தை ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருள் அவனுக்குத் தெரிந்தது.
அந்தக் கள்ளங்கபடமற்ற குழந்தையைத் தான் காதலித்ததாகவும், அவளுடைய இழப்பைத்தான் சகிக்க முடியாதென்றும் தியாகராஜன் கருதுகிறான் என்பதைப் புரிந்து கொண்டான் ஜீவானந்தம். அவளை இழந்துவிட முடியாது என்பது என்னவோ அவனைப் பொறுத்தவரையில் உண்மைதான். ஆனால் தன்னந் தனியான ஜான்ஸனின் வாழ்க்கையில் அவள் ஒருத்திதான் இனி பற்றுக்கோலாக விளங்கப் போகிறாள். சொந்த தேசத்தையும் உற்றார் உறவினர்களையும் பார்க்க விரும்பும் அவர் ஆசைகளைப் பங்கம் செய்து, தன் வாழ்நாளில் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் துன்பமே அளித்து வந்ததுபோல் அவளுக்கும் ஏன் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் தன் நினைவுகளை ஆழ மூடிப் புதைத்துவிட்டான்.
“நீங்கள் புறப்படுகிற வரையில் இங்கே இருந்துவிட்டு நானும்விமானப் படையில் போய்ச் சரணாகதி அடைந்துவிடுகிறேன் ஸார்!” என்றான் ஜீவானந்தம்.அங்கே கூடியிருந்த எல்லோருடைய உள்ளத்திலும் பெரிய புயல் வீசி அடங்கின களைப்புத் தென்பட்டது.
“ரொம்ப சரி! உனக்கு நான் அதையே சொல்லலாம் என்று நினைத்தேன். மை பாய்! இனிமேல் பெரிய விஷயங்களுக்காக ஆசைப்படு” என்று சுருக்கமாக, சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்தார் அந்தக் கிழவர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஜான்ஸனுடைய வீட்டை விட்டு வெளியே வரும்போது, தியாகராஜனின் தோள்களை அன்போடு பற்றிக் கொண்டு ஜீவா கரகரத்த குரலில் பேசலானான்.
“உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும், தியாகராஜன். என்னை அறிந்தோ அறியாமலோ உங்கள் வாழ்க்கையில் சண்டமாருதமாக நான் நுழைந்து உங்கள் இன்பங்களையும் நிம்மதிகளையும் சூறையாடியிருக்கிறேன். இந்த இளமைப் பருவத்தில் மூன்று வருஷ காலம் நீங்கள் வெந்து உள்ளுக்குள் சாம்பலாகிக் கொண்டிருந்தீர்கள். காலம் மாறுகிறது. தயவு செய்து என்னை மன்னிக்கிற சமிக்ஞையாகவாவது அதை மாற்றிக் கொள்ளுங்கள். எனக்கு உங்கள் கல்யாணப் பத்திரிகை ஒன்றை அனுப்பி வையுங்கள்” என்று கண்ணீர் மல்க கூறினான் ஜீவானந்தம்.
தன் தோள்களின் மேல் விழுந்திருந்த கைகளை எடுத்து, நன்றியும் துக்கமும் வேதனையும் சூழ்ந்திருந்த இதயத்திலிருந்து கண்ணீரைத் தவிர எந்த வார்த்தைகளும் வராமல் திணறினான் தியாகராஜன். அந்தச் சமயத்தில் அவனைப் பார்க்கையில், ஒரு போர்க்களத்தில் அனேக காயங்களுடன், வீட்டுக்கு நிர்ப்பந்தமாக அனுப்பப்பட்ட ராணுவ வீரனைப் போல் இருந்தது.
அந்த மலையில் - மாயவிக்னேசுவரர் கோவில் அருகில் - மூங்கிற் புதர்களுக்கு மத்தியில் - ரஸ்தாவுக்கு அருகில் போடப்பட்டிருந்த ஜீவானந்தத்தின் சிறுகுடிசையில் அதற்கப்புறம் பழைய சந்தடிகள் இல்லை. நிஷாவின் தண்டைச் சதங்கைகள் குலுங்கும் ஓசையும், ஜீவானந்தத்தின் குளியான குரலும், கிழவர் ஜான்ஸன் மாடுகளை ஏர் உழும்போது மிரட்டும் ஓசையும் நிரந்தரமாகக் கேட்கவில்லை. தியாகராஜன் எப்போதாவது குதிரையின்மேல் போகும்போது, மாய விக்னேசுவரர் கோவில் அருகில் ஒரு பாறை மீது குத்துக்காலிட்டு இரண்டு கைகளாலும் தாடையைத் தாங்கியவாறு உட்கார்ந்திருக்கும் ஜக்கோடனைப் பார்ப்பான். பிரியத்துடன் வளர்த்த பறவை ஒன்று பாடிவிட்டு எங்கோ தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டதைத் தாங்கமுடியாமல் ஏக்கத்துடன் அவன் அங்கேயே விக்கிரமாகிவிட்டது போலவே, தியாகராஜனுக்குப் பிரமை தட்டும்.
* * *
கங்கா! அந்தப் பெண் வாழவில்லை. வாழவும் விடவில்லை. என்னாலேயே சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இது தண்டனையாக விதிக்கப்பட்டதா?
ஜீவானந்தம் கங்காவின் அழகிய உருவம் சிறுத்தையாமல் சின்னாபின்னாப்படுத்தப்படுத்தப்பட்டதையோ, அவளுக்கு நடந்த ஈமச் சடங்குகளையோ அல்லது அந்தச் சடங்குக்கு வந்த அவள் பெற்றோர், மலைக்கு வந்ததை அறிந்தும் அவர்களையோ பார்க்க அவன் விரும்பவில்லை.
அவனுடைய குடிசையின் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு அதன் சிறிய ஜன்னல் வழியே தெரியும் காட்டைப் பார்த்தவாறே அவனுடைய வாழ்க்கையைக் கவ்வியிருந்த பேரிருளையும், கங்காவையும் பற்றித் துக்கங்களால் சக்தியிழந்து, உணர்ச்சிகளே மரத்துப்போன மனத்தில் எண்ணிக் கொண்டிருந்தான்.
கங்காவின் இதயத்தில் அவன் மூட்டிவிட்ட அக்கினி, அணையாத காட்டுத் தீயாகிக் கடைசி வரையில் நின்று எரிந்து, உதிர்ந்த சாம்பல் குவியலில் அவள் அணைந்து விட்டாள். எத்தனை புனித அர்த்தத்தில் அவர்கள் உறவு முதன் முதலில் கொழுந்துவிட்டுக் கிளம்பிற்றோ, அந்த அர்த்தமே ஜீவானந்தத்துக்கு இப்போது நினைக்கப் பெரிதும் வருத்தத்தைத் தந்தது.
தியாகராஜன்! அவன்தான் எவ்வளவு பொறுமைசாலி; துப்பாக்கியும் கையுமாகத் திரிபவனாயிருந்தாலும் அவன் உள்ளத்தில்தான் எப்படிப்பட்ட மனிதத்தன்மை நிலவியிருந்தது; கங்கா மாறக்கூடும் என்று அவன் பொறுத்திருந்திருக்கிறான். சன்யாஸியைப் போல் கூடவாழும் ஒரு மனைவியைக் காலம் சிகிச்சைப்படுத்தும் என்பதற்காகச் சகித்து வந்திருக்கிறான். அவன் கேட்ட கேள்விகள், வலுவான இரும்புச் சங்கிலிகளாக ஜீவானந்தத்தைச் சுற்றிப் பிணைத்தன.
‘காதல் என்றும் தெய்வீகம் என்றும் பேசுகிறீர்களே - அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் குரூரமாகத் தண்டிக்கப்பட வேண்டுமா?’
‘இல்லை தியாகராஜன், இல்லை! உங்களைப் போன்ற மனிதர்களும் இந்தப்பூமியில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது வாழவேண்டும்; அவர்களை வாழ்விக்க வேண்டும்.’
‘மிருதுவான உணர்ச்சிகளும், மாதுரியமான உள்ளமும் படைத்த கங்கா, தியாகராஜனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெல்லாம் என்னைக் குற்றவாளியாக்கி விட்டிருக்கிறாளே!’
தலையணையின் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு, கண்ணீரும், ஓசையும் வெளியே தெரியாமல் ஜீவானந்தம் அழுதான்.
கங்காவின் உள்ளத்தில் பற்றியிருந்த அக்னி, யாருக்கும் உபயோகப்படாமல் வெறும் உணர்ச்சிகளின் மூர்த்தண்யத்தினாலேயே யாரைக் கையெடுத்துக் கும்பிட வேண்டுமோ அவனைப் பொசுக்கி வந்திருக்கிறது. அவளுடைய காதல் எவ்வளவு மேன்மையானது என்று ஜீவானந்தத்தால் உணரப்பட்டாலும், அதைப் பெருமையோடு அங்கீகரிக்க இயலவில்லை. பெண் வாழ்விப்பவள்தான். தன் உணர்ச்சிகளை, உள்ளத்தை, தன் வாழ்வையே மற்றவர்களை வாழ்விப்பதில்தான் அவள் செலவிடுகிறாள்.
“கங்கா! ஐயோ கங்கா!” ஜீவா அவளுக்காக, அவளுடைய தவறுகளுக்காக வருந்திக் கொண்டான்.
“நான் இங்கிலாந்துக்குப் போவதாக முடிவு செய்து விட்டேன்” என்று தமதுஅறையில் உட்கார்ந்திருந்த அனைவரிடமும் கூறினார் ஜான்ஸன். தியாகராஜன் தெம்பும் சோபையும் இழந்த முகத்தை உயர்த்தி அவரை நிமிர்ந்து பார்த்தான். ஜீவானந்தத்திடம் அவர் இவ்விஷயத்தை ஏற்கனவே சொல்லிவிட்டிருந்ததால் அவன் முகத்தில் எந்தச் சலனமுமில்லை.
ஜக்கோடன் மிகவும் கவலையோடு அவரை நிமிர்ந்து பார்த்தான். எல்லோரையும் ஒருமுறை நிதானமாகப் பார்த்தவாறே, “என் கூடவே என் மகள் நிஷாவும் வருகிறாள்” என்றார் ஜான்ஸன்.
“என்ன?” என்று ஆச்சரியத்தோடு ஜீவானந்தமும் தியாகராஜனும் ஒரே சமயத்தில் கேட்டார்கள்.
“ஆம்! நிஷா என் மகள்தான். இங்கு ஒரு மலைஜாதிப் பெண்ணுக்குப் பிறந்தாலும் அவளுடைய தந்தை நான்தான். ஏற்கனவே சொன்னாற்போல் நான் என் வாழ்நாளில் மேரிக்குச் செய்த இந்தப் பெரிய துரோகத்தையும் அவள் மன்னித்துவிட்டாள். இந்தக் குழந்தையைப் பெற்றுவிட்டு, நிஷாவின் தாய் காலமாகிவிட்டாள். மேரியின் இஷ்டப்பிரகாரம் நான் அந்தப்பெண் குழந்தையை ஜக்கோடனிடம் ஒப்படைத்துவிட்டேன். மேரிக்கு அப்புறம் அவள் இஷ்ட விரோதமாக நான் நடந்துகொள்ளப் பிரியப்படவில்லை. அவள் முழுக்க ஒரு மலைஜாதிப் பெண்ணாகவே வளர்ந்துவிட்டாள். ஆனால், அவளை என் தேசத்தில் நான் சுலபமாகத் திருத்திக் கொள்ளமுடியும். என் கூடவே ஒரு தமிழ் பேசும் மகளை அழைத்துக் கொண்டு நான் தாய்நாட்டுக்குத் திரும்புகிறேன்” என்றார்.
அவருடைய மேன்மை மிக்க பண்பாடும், ஒருமுறை செய்த தவறுக்காக வருந்தும் கழிவிரக்கமும் எல்லோர் நெஞ்சையும் உருக்கிவிட்டன.தியாகராஜன் ஜீவானந்தத்தை ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருள் அவனுக்குத் தெரிந்தது.
அந்தக் கள்ளங்கபடமற்ற குழந்தையைத் தான் காதலித்ததாகவும், அவளுடைய இழப்பைத்தான் சகிக்க முடியாதென்றும் தியாகராஜன் கருதுகிறான் என்பதைப் புரிந்து கொண்டான் ஜீவானந்தம். அவளை இழந்துவிட முடியாது என்பது என்னவோ அவனைப் பொறுத்தவரையில் உண்மைதான். ஆனால் தன்னந் தனியான ஜான்ஸனின் வாழ்க்கையில் அவள் ஒருத்திதான் இனி பற்றுக்கோலாக விளங்கப் போகிறாள். சொந்த தேசத்தையும் உற்றார் உறவினர்களையும் பார்க்க விரும்பும் அவர் ஆசைகளைப் பங்கம் செய்து, தன் வாழ்நாளில் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் துன்பமே அளித்து வந்ததுபோல் அவளுக்கும் ஏன் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் தன் நினைவுகளை ஆழ மூடிப் புதைத்துவிட்டான்.
“நீங்கள் புறப்படுகிற வரையில் இங்கே இருந்துவிட்டு நானும்விமானப் படையில் போய்ச் சரணாகதி அடைந்துவிடுகிறேன் ஸார்!” என்றான் ஜீவானந்தம்.அங்கே கூடியிருந்த எல்லோருடைய உள்ளத்திலும் பெரிய புயல் வீசி அடங்கின களைப்புத் தென்பட்டது.
“ரொம்ப சரி! உனக்கு நான் அதையே சொல்லலாம் என்று நினைத்தேன். மை பாய்! இனிமேல் பெரிய விஷயங்களுக்காக ஆசைப்படு” என்று சுருக்கமாக, சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்தார் அந்தக் கிழவர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஜான்ஸனுடைய வீட்டை விட்டு வெளியே வரும்போது, தியாகராஜனின் தோள்களை அன்போடு பற்றிக் கொண்டு ஜீவா கரகரத்த குரலில் பேசலானான்.
“உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும், தியாகராஜன். என்னை அறிந்தோ அறியாமலோ உங்கள் வாழ்க்கையில் சண்டமாருதமாக நான் நுழைந்து உங்கள் இன்பங்களையும் நிம்மதிகளையும் சூறையாடியிருக்கிறேன். இந்த இளமைப் பருவத்தில் மூன்று வருஷ காலம் நீங்கள் வெந்து உள்ளுக்குள் சாம்பலாகிக் கொண்டிருந்தீர்கள். காலம் மாறுகிறது. தயவு செய்து என்னை மன்னிக்கிற சமிக்ஞையாகவாவது அதை மாற்றிக் கொள்ளுங்கள். எனக்கு உங்கள் கல்யாணப் பத்திரிகை ஒன்றை அனுப்பி வையுங்கள்” என்று கண்ணீர் மல்க கூறினான் ஜீவானந்தம்.
தன் தோள்களின் மேல் விழுந்திருந்த கைகளை எடுத்து, நன்றியும் துக்கமும் வேதனையும் சூழ்ந்திருந்த இதயத்திலிருந்து கண்ணீரைத் தவிர எந்த வார்த்தைகளும் வராமல் திணறினான் தியாகராஜன். அந்தச் சமயத்தில் அவனைப் பார்க்கையில், ஒரு போர்க்களத்தில் அனேக காயங்களுடன், வீட்டுக்கு நிர்ப்பந்தமாக அனுப்பப்பட்ட ராணுவ வீரனைப் போல் இருந்தது.
அந்த மலையில் - மாயவிக்னேசுவரர் கோவில் அருகில் - மூங்கிற் புதர்களுக்கு மத்தியில் - ரஸ்தாவுக்கு அருகில் போடப்பட்டிருந்த ஜீவானந்தத்தின் சிறுகுடிசையில் அதற்கப்புறம் பழைய சந்தடிகள் இல்லை. நிஷாவின் தண்டைச் சதங்கைகள் குலுங்கும் ஓசையும், ஜீவானந்தத்தின் குளியான குரலும், கிழவர் ஜான்ஸன் மாடுகளை ஏர் உழும்போது மிரட்டும் ஓசையும் நிரந்தரமாகக் கேட்கவில்லை. தியாகராஜன் எப்போதாவது குதிரையின்மேல் போகும்போது, மாய விக்னேசுவரர் கோவில் அருகில் ஒரு பாறை மீது குத்துக்காலிட்டு இரண்டு கைகளாலும் தாடையைத் தாங்கியவாறு உட்கார்ந்திருக்கும் ஜக்கோடனைப் பார்ப்பான். பிரியத்துடன் வளர்த்த பறவை ஒன்று பாடிவிட்டு எங்கோ தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டதைத் தாங்கமுடியாமல் ஏக்கத்துடன் அவன் அங்கேயே விக்கிரமாகிவிட்டது போலவே, தியாகராஜனுக்குப் பிரமை தட்டும்.
* * *